என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆசாரிபள்ளம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் மின்தடை
- காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும்.
- தெக்கூர், தெக்குறிச்சி, காக்காத்தோப்பு, பழவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம், தடிக்காரன்கோணம், வடசேரி, வல்லன்குமாரவிளை துணை மின்நிலையங்களில் நாளை மறுநாளும் (செவ்வாய்க்கிழமை), தெங்கம்புதூர், ராஜாக்க மங்கலம் உபமின் நிலையங்களில் 5-ந்தேதியும் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
அதன்படி நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாகர்கோவில், பெரு விளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன்கோவில், எம்.எஸ். ரோடு, கல்லூரி சாலை, கே.பி. ரோடு, கோர்ட்டு ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிப்பள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம், அருமநல்லூர், கடுக்கரை, காட்டுப்புதூர், அழகியபாண்டியபுரம், தடிக்காரன்கோணம், தேரேக்கால்புதூர், கோதைகிராமம், அப்டா, திரவியம் ஆஸ்பத்தரி பகுதி, சடையன்குளம், நாவல்காடு, எறும்புகாடு, தம்மத்துக்கோணம், இருளப்பபுரம், அனந்தநாடார்குடி, பட்டகசாலியன்விளை, கலை நகர், பொன்னப்ப நாடார் காலனி, குருசடி, என்.ஜி.ஓ. காலனி, குஞ்சன்விளை மற்றும் புன்னைநகர் ஆகிய பகுதிகளிலும்,
5-ந்தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை, மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையர்புரம், புத்தளம், அளத்தங்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காத்தோப்பு, பழவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






