search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய பால்
    X

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய பால்

    பெரம்பலூரில் பஸ் - வேன் மோதி விபத்துதிருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய பால்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே இரூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பால் கேன்களுடன் லோடு வேன் ஒன்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று உள்ளது. பெரம்பலூர் ஆலத்தூர் கேட், செட்டி குளம் பாலதண்டாயுதபாணி கோவில் ஆர்ச் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த பஸ் ஒன்று வேனின் மீது மோதி உள்ளது. இதில் வேன் நிலைக்குலைந்துள்ளது. இதன் காரணமாக கேன்கள் அனைத்தும் சரிந்து கவிழந்துள்ளது. இதனால் கேன்களில் வைக்கப்பட்டிருந்த பால் ரோட்டில் ஆறாக ஓடியது.

    இதில் வேனில் பயணம் செய்த 3 பெண்கள் காயமடைந்தனர். அவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். வேன் விபத்துக்கு ள்ளானதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    Next Story
    ×