search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்
    X

    கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்

    ஜெயங்கொண்டம் எம்.ஆர்.சி. கல்லூரியில்கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம்எம்.ஆர்.சி. கல்லூரியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம், தத்தனூர் எம்.ஆர்.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன்,அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கலைஞர் கருணாநிதியின் பல்வேறு சாதனைகளைப் பற்றி விளக்கி பேசினார். அவருடைய போராட்டத்தில் அரியலூர் மாவட்டம் முக்கிய சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என பேசினார்.

    இந்நிகழ்வில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ச.பரிமளம், தாசில்தார்கள் துரை, கலைவாணன், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா,தஞ்சாவூர் மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜ் மற்றும் அரசு அலுவலர்கள்,பேராசிரியர்கள், இருபால் மாணவ,மாணவிகள்,கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×