என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
    X

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

    • 809 விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. கண்ணன் 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு வழங்கினார்

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற இந்த விழாவில், ஜெயங்கொண்டம், கல்லாத்தூர் தண்டலை, பூவாணி பட்டு, வெத்தியார் வெட்டு, கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை, மற்றும் அரசு உதவி பெறும் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 8 பள்ளிகளை சேர்ந்த 309 மாணவர்களுக்கும், 500 மாணவிகளுக்கும் சேர்த்து 809 மாணவர்களுக்கு, ரூ.32 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தலைமை ஆசிரியர் தவிக்குமார் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்ஜெயா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.இந்நிகழ்வில் அரியலூர் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் விஜயபாஸ்கர், பள்ளி கல்வி துணை ஆய்வாளர் செல்வகுமார், ஜெயங்கொண்டம் ஒன்றிய கழக செயலாளர்கள் தனசேகர், மணிமாறன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்தையன், நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், நகர்மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் லதா கண்ணன், நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜமாணிக்கம், மீனாட்சி நடராஜன், வெற்றிவேலன், தலைமை ஆசிரியர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×