என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளைஞர் திறன் திருவிழா
    X

    இளைஞர் திறன் திருவிழா

    • இளைஞர் திறன் திருவிழா நாளை நடக்கிறது.
    • ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை பெற்று பயனடையலாம். மேலும், இதில் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை கலந்து கொண்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பினை வழங்க உள்ளார்கள். வருகை தரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் தங்களது சுய விவர குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×