என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் வாலிபர் மாயம்
- கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய வாலிபர் மாயமானார்
- தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த பிரித்விராஜ் மகன் ஜனா(21) இவர் அரியலூர் அரசு கலை கல்லூரியில் பி ஏ தமிழ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ஜனா படிப்பை தொடராமல் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் தங்கிருந்து வந்தார். கடந்த 8ம் தேதி ஜனா வீட்டில் இருந்தவர்களிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் ஜனா கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து ஜனா தந்தை பிரித்விராஜ் உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிந்து மாயமான ஜனாவை தேடி வருகிறார்.
Next Story






