search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்காளை தாக்கிய தங்கை கைது
    X

    அக்காளை தாக்கிய தங்கை கைது

    • அக்காளை தாக்கிய தங்கை கைது செய்யப்பட்டார்.
    • இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மேல கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா(வயது 55). இவரது தங்கை அதே பகுதியை சேர்ந்த வசந்தி(50). இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று விஜயா தனது டீக்கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வசந்தி, விஜயாவிடம், தங்களது தாய்க்கு சொந்தமான இடத்தில் அவர் தங்கக்கூடாது என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் விஜயாவை, வசந்தி திட்டி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஜயா அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் விஜயா அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து வசந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×