என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உலக வன தின விழிப்புணர்வு பேரணி
- விழிப்புணர்வு வாசகங்கள் கைகளில் ஏந்தி பேரணி நடைபெற்றது
- பதுவனேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் உலக வனம் நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஷாம் கர்ணல் அனைவரையும் வரவேற்றார். ஜெயங்கொண்டம் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் காஞ்சனா சரவணன் தலைமை தாங்கினார். பரப்ரம்மம் ஃபவுண்டேஷன் நிறுவனரும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான முத்துக்குமரன் பேரணியை துவக்கி வைத்து விளக்க உரையாற்றினார்.பேரணியில் நகராட்சி ஊழியர்கள் நர்சிங் மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியானது ஜூப்லி ரோடு, நான்கு ரோடு, பேருந்து நிலைய சாலை வழியாகச் சென்று செந்துறை ரோடு, ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பேரணி நிறைவுற்றது.பேரணியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ், ஏசிஏ சர்ச் ஜோஸ்வா, டெங்கு ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தூய்மை பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் ஜூபிலி ரோடு பதுவனேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்