என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
- அரியலூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
- இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலர் முருகேசன் தலைமை வகித்தார்.
அரியலூர்:
அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு மே தினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலர் முருகேசன் தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் கலந்து கொண்டு தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் கலியமூர்த்தி, மாநில துணைச் செயலர் கருணாநிதி, சங்க காப்பாளர் அருண்ராஜா, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலர் சங்கர், அரசு சிமென்ட் ஆலை சங்கத் தலைவர் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






