என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரியலூரில் வாகன சோதனை
Byமாலை மலர்21 July 2023 6:31 AM GMT
- அரியலூரில் வாகன சோதனை நடைபெற்றது
- 7 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், வாகன ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூர் நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர். அப்போது ஓட்டுனர் உரிமம் மற்றும் தகுதி சான்று உள்பட எந்த ஆவணங்களும் இன்றி 7 ஆட்டோக்கள் இயக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 7 ஆட்டோக்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த ஆட்டோ உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று நகரில் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படும் எனவும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X