என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயமானார்
    X

    இளம்பெண் மாயமானார்

    • மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் காலனி தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகள் ஷீலா(வயது 22). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி காலை மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் தங்கராசு இதுகுறித்து தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×