என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை
- விஷம் குடித்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
- விசாரணை நடத்தும் போலீசார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 60). விவசாயியான இவர் சம்பவத்தன்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வாந்தி எடுத்துள்ளார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






