என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசுமாட்டை திருடியவர் கைது
- பசுமாட்டை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- சிறையில் அடைத்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மலத்தான் குளம் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா (வயது 34). இவர் 3 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் சினை பசு மாடு ஒன்றை மர்ம ஆசாமி திருடி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சித்ரா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுமாட்டை திருடிய மேல வண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






