என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி பறிப்பு
    X

    பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி பறிப்பு

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது 2 மர்ம நபர்கள் சங்கிலியை பறித்து சென்றனர்
    • சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழசெங்கல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது 30). இவர்களது 2 வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் சூர்யா தனது இரு சக்கர வாகனத்தில் தாய் வசந்தா மற்றும் குழந்தை இருவருடன் ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் கீழச்செங்கமேடு கிராமத்திற்கு திரும்பி பொன்னேரி அருகே வந்து கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக பின் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனத்தில் முகத்தை கர்சிப்பால் மூடிய நிலையில் வந்த 2 மர்ம நபர்கள் சூர்யாவை முந்தி சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். அதிர்ச்சியடைந்த சூர்யா வண்டியை நிறுத்திவிட்டு சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்வழியாக வந்தவர்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் கங்கைகொண்ட சோழபுரம், குருவாலப்பர் கோயில், ஆமணக்கந்தோண்டி பகுதி கடைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கண்காணித்து மர்ம நபர்களை தேடி விசாரித்து வருகின்றனர்.பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×