என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் மாயம்; தந்தை போலீசில் புகார்
    X

    இளம்பெண் மாயம்; தந்தை போலீசில் புகார்

    • இளம்பெண் மாயமானதால் தந்தை போலீசில் புகார் செய்தார்
    • புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிந்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் கோப்பிலியன்குடிகாடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவர் குடும்பத்துடன் அயன்ஆத்தூரில் உள்ள மாமனார் வீட்டில் 7 வருடங்களாக வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேசின் மூத்த மகள் மகள் சரண்யா (18) ஆனந்தாவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று சரண்யா வீட்டில் இருந்துள்ளார். தந்தை ரமேஷ் மளிகை கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது சரண்யாவை காணவில்லை. பின்னர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் சரண்யா கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்கு பதிந்து மாயமான சரண்யாவை தேடி வருகிறார்.

    Next Story
    ×