search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன விபத்தில் வாலிபர் பலி
    X

    வாகன விபத்தில் வாலிபர் பலி

    • வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
    • சினிமா பார்த்து வீட்டிற்கு வரும்போது விபரீதம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து சிலால் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். மகன் எழிலரசன். இவர் தனது நண்பர்கள் பரத், ரிஷிபாலன், சுதாகர் ஆகியோருடன் ஜெயங்கொண்டம் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக ஜெயங்கொண்டம்-கும்பகோணம் ரோட்டில் சிலால் வால் பட்டறை அருகே அவர்கள் வந்த வாகனத்தை மாற்றிக் கொண்டு அவரவர் வீட்டிற்கு புறப்பட தயாரான நிலையில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் எழிலரசன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் எழிலரசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர்த்தபினர். மேலும் இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் திருநாகேஸ்வரம் கல்லுக்கார தெருவை சேர்ந்த ராஜாராமன் (48) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×