என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
    X

    அரியலூர் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

    • அரியலூர் காவல் நிலையங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
    • தலை கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா திடீரென உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதில் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும் ஏதேனும் தகவல் கிடைத்தால் அவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் விபத்து தடுக்கும் விதமாக வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். மேலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிகிறார்களா என்று பார்க்க வேண்டும். தலை கவசம், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.

    Next Story
    ×