என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயிறு வலியால் அவதிபட்டவர் தற்கொலை
    X

    வயிறு வலியால் அவதிபட்டவர் தற்கொலை

    • வயிறு வலியால் அவதிபட்டவர் தற்கொலை செய்து கொண்டார்
    • புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அழகப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உடையார்பாளையம்,

    காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ராஜேந்திரன்(வயது 58). ராஜேந்திரன் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியதாகவும், உறவினர்கள் உதவியுடன் கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அழகப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×