என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப் பள்ளியில் மன வள, தற்காப்பு கலைப் பயிற்சி வகுப்பு தொடக்கம்
    X

    அரசுப் பள்ளியில் மன வள, தற்காப்பு கலைப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

    • அரசுப் பள்ளியில் மன வள, தற்காப்பு கலைப் பயிற்சி வகுப்பு தொடக்கப்பட்டது
    • இந்த பயிற்சியானது 3 மாதம் நடைபெற உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்புக்கு ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தொடங்கி வைத்து பேசும்போது, பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ,மன வளத்தை பெருக்கவும், மன பயம் போக்கவும், மன இறுக்கம், மன அழுத்தம் குறைத்து மன தைரியத்தை உருவாக்கி நற்சிந்தனையுடன் கற்றலில் மேம்படுத்திக்கொள்ள இந்த மனவள மற்றும் தற்காப்புகலை பயிற்சியானது வழங்கப்படுகிறது என்றார்.வட்டார கல்வி அலுவலர் மதலைராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனவள மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகளை பொன்னுசாமி அளித்து வருகிறார். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி வரவேற்றார்.முடிவில் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் நன்றி தெரிவித்தார். இந்த பயிற்சியானது 3 மாதம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×