search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்ரீத் பண்டிகைைய முன்னிட்டு அரியலூர் மாவட்ட பள்ளி வசால்களில் சிறப்பு தொழுகை
    X

    பக்ரீத் பண்டிகைைய முன்னிட்டு அரியலூர் மாவட்ட பள்ளி வசால்களில் சிறப்பு தொழுகை

    • பக்ரீத் பண்டிகைைய முன்னிட்டு அரியலூர் மாவட்ட பள்ளி வசால்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது
    • தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

    அரியலூர்,

    பக்ரீத் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அரியலூர் மார்க்கெட்டில் உள்ள ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதே முஹம்மதியா பள்ளிவாசல், மஸ்ஜிதே உமர் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் இஸ்லாமிய மரபுபடி குர்பானி கொடுப்பதற்காக, ஏழை-எளிய மக்களுக்கு ஆட்டு இறைச்சியை பங்கிட்டு கொடுத்து மகிழ்ந்தனர்.பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலக அமைதிக்காவும், அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் நோய்நொடி இல்லாமல் நன்றாக வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    இதில் அரியலூர் ராமலிங்க நகர் திடலில் தவ்ஹீத ஜமாஅத் சார்பில் நடைபெற்ற தொழுகையில் அந்த அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலர் முஜிபுர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு,மனித நேயம் மிக்க மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் நிர்வாகிகள் அலாவுதீன் சபியுல்லா சையது ரசீது மற்றும் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் திருமானூர் செந்துறை, ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×