என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடை வியாபாரியிடம் கத்தியைகாட்டி மிரட்டி பணம் பறிப்பு
Byமாலை மலர்14 Aug 2023 9:36 AM GMT
- அரியலூரில் கடை வியாபாரியிடம் கத்தியைகாட்டி மிரட்டி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- கத்தியை காட்டி பணம் பறிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் தாகீர் உசேன் (வயது 40). இவர் உடையார்பாளையம் கடைவீதியில் இருசக்கர உதிரி பாகங்கள் மற்றும் பழுது நீக்கம் கடையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பஷீர் மகன் பக்ருதீன் (23), இவரது நண்பர்களான கார்த்திக் (24), அரவிந்த் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து தாகீர் உசேனிடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்தனர். மேலும் இதை யாரிடமாவது கூறினால் கொல்லாமல் விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாகீர் உசேன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து உடையார்பாளையம் கடைவீதியில் நின்று கொண்டு இருந்த பக்ருதீன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X