என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைப்பு
- வாரணவாசி பகுதியில் வாரணவாசி பகுதியில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
- 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
அரியலூர்,
தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படிர் உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து திருமானூர் ஒன்றியம் வாரணவாசி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பழனிச்சாமி, ராமசாமி, ரத்தினம் மற்றும் கீழப்பழுவூர் போலீசார் கலந்துகொண்டனர்.22 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் பள்ளி அருகே 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 5 கிலோ அளவில் விற்பனை செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டுர் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் 2 கடைகளும் மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும், இது போன்று தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்காணித்திட உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவுறுத்தி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்