என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடையார்பாளையம் அருகே பள்ளி மாணவி மாயம்; தாய் போலீசில் புகார்
    X

    உடையார்பாளையம் அருகே பள்ளி மாணவி மாயம்; தாய் போலீசில் புகார்

    • உடையார்பாளையம் அருகே பள்ளி மாணவி மாயமானதால் தாய் போலீசில் புகார் அளித்தார்
    • புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் மேல தெருவை சேர்ந்தவர் அஞ்சப்பன். இவரது மனைவி தேவி (வயது 43). இவர்களது மகள் அனுசியா (17) நடுவலூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தேவி தூங்கி எழுந்து பார்த்த போது அனுசியாவை காணவில்லை. பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் அனுசியா கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து தேவி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிந்து மாயமான அனுசியாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×