என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
    X

    மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது

    • மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • கிராம நிர்வாக அலுவலர் போலீசில் ஒப்படைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் உதயநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் தனது உதவியாளருடன் உதயநத்தம் தினக்குடி பிரிவு சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தினக்குடி ஓடையில் இருந்து உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த ரவி (வயது 50) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கிராம நிர்வாக அலுவலர் தா.பழூர் போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×