என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்
- ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அரியலூர்:
அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினருமான பஞ்சாபிகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், அரியலூர் நகர கிளை தலைவராக சந்தானம், துணை தலைவராக ஷேக் தாவூத் , செயலாளராக சிவக்குமார், பொருளாளராக செந்தில்முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதே போல், அரியலூர், திருமானூர், ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடர்ந்து மாவட்டத்தில் பணிபுரியும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை வருகை பதிவேட்டில் கையொப்பம் இட அனுமதிக்காதற்கும், ஊதியப்பட்டிலை கருவூலத்திற்கு அனுப்பாதற்கும் கண்டனம் தெரிவிப்பது. மாவட்ட ஆய்வு கூட்டங்களில் வளர்ச்சி துறை ஊழியர்களை ஒருமையிலும், பண்பில்லாமலும் தடித்த வார்த்தைகளில் பேசி, மன உளைச்சலை ஏற்படுத்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து செப்.30 ஆம் தேதி கலெக்டர் தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தை புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக மாவட்ட இணைச் செயலர் பழனிவேல் வரவேற்றார். முடிவில் ரத்தினவேல் நன்றி தெரிவித்தார்.






