என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓரியூரில் ரூ.7 லட்சம் நலதிட்ட உதவிகள்
- ஓரியூரில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஓரியூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 111 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். மேலும் இம்முகாமில், அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். முன்னதாக, இம்முகாமில்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள்அமைக்கப்பட்டிருந்தன. முகாமில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உமா மகேஸ்வரன், மகளிர் திட்ட இயக்குநர்(பொ) ஆறுமுகம், பொது சுகாதார துணை இயக்குநர் அஜிதா, வட்டாட்சியர் கண்ணன்,ஊராட்சித் தலைவர்கள் புங்கங்குழி மணிமாறன், கோமான் பாஸ்கர் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.






