search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளி வியாபாரி வீட்டில் கொள்ளை
    X

    ஜவுளி வியாபாரி வீட்டில் கொள்ளை

    • ஜவுளி வியாபாரி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
    • குடும்பத்துடுன் சென்னைக்கு சென்ற போது நடந்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் ம ாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தர்மலிங்கம் (வயது 50). இவர், ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னைக்கு சென்றிருந்த இவர், நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பகுதியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த புடவைகள் மற்றும் பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×