search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூழ் மரம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
    X

    கூழ் மரம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்

    • ஆண்டிமட விவசாயிகளுக்கு கூழ் மரம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
    • தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆண்டிமடம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் நிலக்கரி சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, திரும்ப விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்களில் குறுகிய காலத்தில் கூழ் மரம் சாகுபடி செய்து அதிக வருமானத்தை ஈட்டும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் சார்பாக தேவனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பாக வனச்சரக அலுவலர் சரவணகுமார் பங்கேற்று வனத்துறை திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன உதவி பொதுமேலாளர் ரவி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் உதவி பொது மேலாளர் ரவி, முதுநிலை மேலாளர் செழியன், துணை மேலாளர் பிரசாத் மற்றும் தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சவுக்கு, தைலமர மரக்கன்றுகள் கருத்தரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    Next Story
    ×