என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
- பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
- 311 மனுக்கள் பெறப்பட்டது
அரியலூர் :
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 311 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்று கொண்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் இரண்டு மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 06 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்திட்ட அலுவலர் சிவக்குமார், மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






