என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி
    X

    பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி

    • அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறவிருக்கிறது
    • மாணவர்கள் கலந்து கொள்ள கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அழைப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 27ந் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து, தலைமை ஆசிரியரின் ஒப்பம் பெற்று பள்ளி, முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணிக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று போட்டிக்கும் மூன்று மாணவர்கள் மட்டும் ஒரு பள்ளியில் இருந்து அனுப்பிவைக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டியில் முதல் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் மாநில அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநிலப் போட்டிகள் தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும். இந்த வாய்ப்பினைக் பள்ளியில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×