என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் எண்ணெய் பனை நடவு
    X

    அரியலூரில் எண்ணெய் பனை நடவு

    • அரியலூரில் எண்ணெய் பனை நடவு தொடங்கியது
    • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தொடங்கி வைத்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழக்கொளத்தூர் கிராமத்தில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை நடவு நிகழ்வு நடைபெற்றது.அரியலூர் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா இதில் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, பனை மரக்கன்றுகளை நடத்து வைத்தார். அரியலூர் எம்.எல்.ஏ., சின்னப்பா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற, இந்த விழாவில் கலெக்டர் பேசும்போது, பாமாயில் மர சாகுபடியில் குறைவான சாகுபடி செலவு, வேலையாட்கள் தேவை குறைவு, மழை, வெள்ளம், களவு சேதம் இல்லை, நீர், உர நிர்வாகத்திற்கேற்ப மகத்தான மகசூல், தரமான கன்று விநியோகம், உயர் தொழில்நுட்ப ஆலோசனைகள், முத்தரப்பு அடிப்படையில் வங்கி கடன், இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் உத்திரவாத கொள்முதல், பெரு விவசாயிகளின் பாதுகாப்பு தொழில்முறைகள் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளது என்று அவர் பேசினார்.தொடர்ந்து வேளாண்மைத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர்ராமகிருஷ்ணன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) இந்திரா, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர்சுமதி அசோகசக்கரவர்த்தி, வட்டாட்சியர்கண்ணன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், விவசாயிகள், வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றம் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×