search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்து வட்டியில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் மனு
    X

    கந்து வட்டியில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் மனு

    • கந்து வட்டியில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.
    • கந்து வட்டி கொடுமையிலிருந்து காப்பாற்ற வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், செந்துறை, சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் மகன் செல்வம் இவர் ஜவுளித் தொழில் செய்து வருகிறார், இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வந்து கலெகடர் ரமண சரஸ்வதியிடம் மனு ஒன்றை அளித்தார் அதில்,

    தொழிலை மேம்படுத்த ஆதிகுடிக்காடு சங்கர் என்பவரிடம் தலா 25 லட்சம் வீதம் 75 லட்சம் கடனாக பெற்றிருந்தேன், அதனை அடைப்பதற்காக அவரிடம் நான் ரூ.1 கோடி கொடுத்து இனிமேல் நமக்குள் எந்த வரவு செலவும் கிடையாது என்று எழுதி வாங்கிக்கொண்டோம்.

    இந்நிலையில் அவர் மீண்டும என்னை மிரட்டி பணம் கேட்டார். இது தொடர்பாக நான் மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இந்த கந்து வட்டி கொடுமையிலிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

    Next Story
    ×