என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடையார்பாளையத்தில் பெரியநாயகியம்மன் திருவீதி உலா
- உடையார்பாளையத்தில் பெரியநாயகியம்மன் திருவீதி உலா நடைபெற்றது
- இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
ஜெயங்கொண்டம்,:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் தாண்டினேரி கரையில் எழுந்தருளி இருக்கும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா சிவராத்திரி முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்றது. நிறைவாக தீர்த்த வாரியும், மஞ்சள் விளையாட்டும் நடைபெற்றது. இவ்விழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மகாலட்சுமி செய்திருந்தார்.
Next Story