என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி
    X

    மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி

    • மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே தொடங்கிய பேரணியை சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை கண்காணிக்க தனி அலுவலரை நியமிக்க வேண்டும். மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் மற்றும் அரசு வேலைகள் உட்பட அனைத்தும் தேசிய அளவில் வெற்றி பெற்ற பாரா ஒலிம்பிக் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கும் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பில், அரசு மற்றும் தனியார் துறைகளில் 4சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு சென்றனர்.

    பேரணியானது பிரதான கடைவீதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணிக்கு, தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரிய உறுப்பினர் சிவகாமி ஆபிரகாம் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் சிறப்புரையாற்றினார். தலைவர் ஆபிரகாம், செயலர் செல்வமணி, துணைச் செயலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முடிவில் பொருளாளர் பிரபாகர் நன்றி கூறினார்.

    Next Story
    ×