என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேன் மோதி முதியவர் பலி
- வேன் மோதி முதியவர் பலியானார்.
- சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 65). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் இவர் ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் ரோட்டில் கல்லாத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






