search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரி விழா
    X

    நவராத்திரி விழா

    • நவராத்திரி விழா தொடங்கியது.
    • அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. நவராத்திரியை முன்னிட்டு அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மனை கோவிலுக்கு அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கொலுமண்டபத்தில் எழுந்தருளிய விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சோடச உபசாரங்கள் நடைபெற்றன. விசாலாட்சி அம்மனுக்கு அஷ்டோத்திர அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×