என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்
- அரியலூர் அரசுப் பள்ளியில் தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம் நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
அரியலூர்,
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நீலவாணன் பங்கேற்று, புகழ்வாய்ந்த ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்த நாளான ஆக.29 அன்று முதல் தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாடப்படுகிறது.மூன்று முறை ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் தங்கம் வெல்ல காரணமாக இருந்த அந்த மகானின் நினைவாக தேசிய விளையாட்டு நாள் கொண்டாடுகிறோம் .பள்ளி மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு தெரிந்த விளையாட்டை தேர்ந்தெடுத்து முழு திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி உங்கள் கையில் வந்து சேரும். அனைத்து விளையாட்டிலும் உங்களால் வாகை சூட முடியும் என்று முதலில் நம்பிக்கை கொள்ளுங்கள்.விளையாட்டு உங்களை உலகம் முழுவதும் அடையாளம் காட்டும்.விளையாட்டு மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்கும் .தொடர்ந்து விளையாடுபவர்களை நோய்கள் எளிதில் தாக்காது. வலிமையான உடலும் வளமான சிந்தனையும் நமது நாட்டிற்கு இன்னும் கூடுதலாக கிடைக்கும் என்றார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின விழாவில் மாணவர் ஒருவருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிய ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நீலவாணன்.முன்னதாக ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். முடிவில் ஆசிரியை கோகிலா நன்றி கூறினார். முடிவில் ஆசிரியை கோகிலா நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.






