என் மலர்
உள்ளூர் செய்திகள்

பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை
- பச்சிளம் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
- உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகள் ராஜேஸ்வரி (வயது 27). இவருக்கும் மேல் திரு தத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் இவரது கணவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டர். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அங்கு தகாத பழக்கம் ஏற்பட்டு ராஜேஸ்வரி கர்ப்பமாகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக ராஜேஸ்வரி ஊருக்கு திரும்பிய நிலையில், தாய் வீட்டில் தங்கிய உள்ளார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் ராஜேஸ்வரி கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக ராஜேஸ்வரி தனது வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று இறந்து கிடந்தார். அவரது 4 மாத ஆண் குழந்தை அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறந்த நிலையில் கிடந்துள்ளது.அவ்வழியே சென்ற அப்பகுதி மக்கள் குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜேஸ்வரி மற்றும் 4 மாத குழந்தையின் சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து உறவினர்களிடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






