search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லாசிரியர்கள் விருது பெற்றவர்கள் கலெக்டருடன் சந்திப்பு
    X

    நல்லாசிரியர்கள் விருது பெற்றவர்கள் கலெக்டருடன் சந்திப்பு

    • அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
    • மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்து அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபுவனேஸ்வரி, தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முல்லையூர், தங்கையன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையார், பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியத்திருக்கோணம், குணசேகரன், பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தா.பழூர், அமலோற்பவம், தலைமையாசிரியர், பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம், சுகுணா, பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, சோழன்குடிகாடு, செ.இராஜேந்திரன், பட்டதாரி ஆசிரியர் மாண்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும், அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற மேற்கண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அரியலூர் கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஆசிரியர்கள் தொடர்ந்து இதே போன்று மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பித்து அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணியினை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா, வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்சாமி முத்தழகு, பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×