search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு
    X

    ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு

    • ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
    • பல்வேறு பொறுப்புகளுக்கு வேட்பு மனு

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அக்கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல், சட்டப் பேரவை உறுப்பினர் சின்னப்பா தலைமையில் தொடங்கியது. மாநில கொள்கை பரப்புச் செயலர் வந்தியத்தேவன் பங்கேற்று, மாவட்டக் கழகத்தில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களை கட்சி நிர்வாகிகளிடமிருந்து பெற்றார்.

    இதையடுத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன்படி அரியலூர் மாவட்ட அவைத் தலைவராக ந.சகாதேவன், மாவட்டச் செயலாளராக க.ராமநா தன், பொருளாளராக வீர.புகழேந்தி, துணைச் செயலாளர்களாக க.கல்யாணகுமார், உஷாசெல்வம், கோ. பழனிவேல், சே.கலிஸ்துராஜ், தலைமை செயற்குழு உறுப்பினராக பெ.தங்கவேல் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களாக இ.இளவரசன், மோகன்தாஸ், சி.ஜெயபால், தங்கராசு, கொளஞ்சி(எ)சிவகுமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    Next Story
    ×