என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக திருவிழா
- கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மக திருவிழா நடைபெற்றது
- பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 11 நாள் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, தொடர்ந்து மூலவர் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு மேளதாளத்துடன் கல்யாணத்திற்கு சீர் வரிசைகள் கொண்டுவந்தனர்.
இதில் மலர் அலங்காரத்தில் வீற்றிருந்த சுவாமி அம்பாளுக்கு அக்கினி வார்த்து வேத மந்திரங்கள் முழுங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் கோவில் உள் பிரகாரத்தில் வீதியுலா நடைபெற்றது. இந்த திருக்கல்யாண உற்சவத்தை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்