என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது
- லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது செய்யப்பட்டார்.
- லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்
அரியலூா் :
அரியலூா் மாவட்டம் ெஜயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் தலைமையிலான காவல் துறையினா் இரவு மேலக்குடியிருப்பு சாலை தெரு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகத் திரிந்தவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அதே பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா்(வயது 55) என்பதும், அவா் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனா். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story






