search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளிக்கு ஆயுள் சிறை
    X

    தொழிலாளிக்கு ஆயுள் சிறை

    • தொழிலாளிக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டது
    • பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த செங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது50). கூலி தொழிலாளியான இவர், வயல் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த 21 வயது பெண்ணை, தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றவாளி இளங்கோவன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையும், ரூ.25,000 அபராதமும், அபராதத் தொகை கட்டத்தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    Next Story
    ×