search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் விளக்குப் பூஜை
    X

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் விளக்குப் பூஜை

    • அடைக்கல அன்னை ஆலயத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

    அரியலூர்

    சுதந்திர தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள அடைக்கல அன்னை ஆலாயத்தில் விளக்குப் பூஜை நடைபெற்றது.

    வீரமாமுனிவர் கட்டியதும், தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில்

    ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று விளக்குப் பூஜை நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டுக்கான ஆண்டுக்கான விளக்குப் பூஜை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

    குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தி விளக்குப் பூஜையை தொடக்கி வைத்தார். விளக்குப் பூஜைக்கு பங்கு தந்தை தங்கசாமி, உதவி பங்கு தந்தை சுவைக்கின் ஆகியோர் சுதந்திர தின சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்நிகழ்வில் சுற்று வட்டாரத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி அன்னையை வழங்கினர்.

    படவிளக்கம்: ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின குத்துவிளக்குப் பூஜை

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலாயத்தில் நடைபெற்ற குத்துவிளக்குப் பூஜையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்திய குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி.

    Next Story
    ×