search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு பாராட்டு
    X

    சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு பாராட்டு

    • 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது
    • சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 324 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அரியலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டது.இதன்படி மாவட்ட அளவில் 2021-22 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த மக்கள் அமைப்புகளுக்கு ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான இரண்டு கூட்டமைப்புகளுக்கு தலா ஒரு லட்சம் ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் ஒரு ஊராட்சி கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு ரூ.50,000 ரொக்கம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், ஐந்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ..25,000 ரொக்கம் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க ப்பட்டது. மேலும்,சர்வதேச மகளிர் தின விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் மகளிர் தினவிழாப் போட்டிகள் மற்றும் விழாவில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, இணை இயக்குநர்ரூபவ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன் மற்றும் அனைத்துத்துறைஅரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×