என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் பூட்டை உடைத்து   நகை கொள்ளை
    X

    வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    • அரியலூர் புதுமார்க்கெட்டில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளைடிக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்

    அரியலூர்,

    அரியலூர் புதுமார்க்கெட் 3-வது தெருவை சேர்ந்தவர் குரு (வயது 39). இவர் உறவினர் வீட்டு விசே ஷத்திற்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவி ட்டார்.

    பின்னர் மீண்டும் வீட்டி ற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்க ப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த குரு, வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவ ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×