என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜமாபந்தி நிறைவு நாள் விழா
    X

    ஜமாபந்தி நிறைவு நாள் விழா

    • ஜமாபந்தி நிறைவு நாள் விழா நடைபெற்றது.
    • 1,224 மனுக்கள் தீர்வு காணப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தி நிறைவு நாள் விழா அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 4,160 மனுக்கள் பெறப்பட்டது, 215 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2,721 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையில் விசாரணையில் உள்ளது. 1,224 மனுக்கள் தீர்வு காணப்பட்டது, என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலட்சுமி, தாசில்தார் குமரய்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாமிதுரை, சர்வே பிரிவு அலுவலர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகுமார்,

    உமாசங்கர், சீனிவாசன், முருகேசன், கோவிந்தராஜ், பிரசன்னா, உட்பட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் விவசாயிகள் குடிகள் மாநாடு நடைபெற்றது, இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×