search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய தர நிர்ணய குழு கூட்டம்
    X

    இந்திய தர நிர்ணய குழு கூட்டம்

    • இந்திய தர நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இந்திய தர நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். மதுரை இந்திய தர நிர்ணய அமைப்பு உயர் அதிகாரி சிவக்குமார் மற்றும் அறிவியல் அறிஞர் ரமேஷ் ஆகியோர் இந்திய தர நிர்ணய குழு கூட்டத்தில் குழு அமைப்பு பணி, நிறுவனம் பற்றியும், காகித உற்பத்தி பற்றியும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறினர், ஐ.எஸ்.ஐ. மற்றும் ஹால்மார்க் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், பொருளின் தரம் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறியதுடன், ரொட்டி தயாரித்தல் பற்றியும், அதன் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விளக்கினர். பொருட்களை வாங்கும்போது முத்திரை பார்த்து வாங்குவது, சந்தையில் தரமான பொருட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி எழுதும் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இந்திய தர நிர்ணய கழகம் வழிகாட்டி ஆசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். முடிவில் முதுகலை ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×