search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்
    X

    அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

    • அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கப்பட்டுள்ளது
    • வட்டார கல்வி அலுவலர் பங்கேற்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி கலந்து கொண்டு தொடங்கப்பட்ட வானவில் மன்றம் மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனையோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் கணிதத்தில் சாதனை புரிய வெகுவாக பயன்படும் என்றார். கணித பட்டதாரி ஆசிரியர் கு.செல்லதுரை, கணித நுட்பங்கள் பற்றியும், கணித புதிர்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் எளிய உபகரணங்களுடன் அறிவியல் சோதனைகள் செய்து காண்பித்து மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆசிரியைகள் ஜெயப்பிரியா, வே.கவிதா விழாவை ஒருங்கிணைந்தனர்.முன்னதாக ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஜா.ஹேமலதா வரவேற்றார். முடிவில் ஆசிரியை வே.பவானி நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×