search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 399 மனுக்களுக்கு உடனடி தீர்வு
    X

    அரியலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 399 மனுக்களுக்கு உடனடி தீர்வு

    • அரியலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 399 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணபட்டது
    • 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அரியலூர்,

    அரியலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமையில், 68 கிராமங்களுக்கு நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 1,082 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 399 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 131 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 552 மனுக்கள் விசாரணை செய்து தீர்வு காண அனுப்பப்பட்டுள்ளது. தாசில்தார் கண்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், பசுபதி, வருவாய் ஆய்வாளர்கள் முருகன், கவிதா, வனிதா, விஜயா, வசந்தா, கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகுமார், சீனிவாசன், ராஜ்குமார், ராயர், தலைமையிடத்து நிலஅளவை பிரிவு அலுவலர் வெற்றிசெல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஜமாபந்தி நிறைவு பெற்றதை தொடர்ந்து, விவசாயிகள் மாநாடு நடைபெற்றது, ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×